Thursday 7 August 2014

ஓளிதரிசனத்தை

ஓளிதரிசனத்தை

இந்த ஓளி தரிசனத்தை பயில வேண்டுமாம். கவனக் குவிப்புடன் மௌனமாய் இருந்து “அங்”என மனதை கண்டத்தில் நிலை நிறுத்தி மூச்சினை “சிம்” என உச்சியில் ஏற்றி பிராணயாமம் செய்திட வேண்டுமாம். அப்படித் தொடர்ந்து செய்து வருகையில் பரம ஒளியானது பளீர் என தோன்றும்

மந்திரம் உச்சரிக்கும் முறை

சில முக்கிய தமிழ் மந்திரங்கள் உங்களுக்காக

மந்திரம் உச்சரிக்கும் முறை

தமிழ் மொழியின் தொன்மையை உணர்ந்தவர்கள் சாகாவரம் பெற்றவர்கள் ஆவார்கள் .
தமிழ் மொழியில் உள்ள உயிர் எழுத்துகள் மற்றும் மெய் எழுத்துகளை தெரிந்து கொண்டு அதனுடன் "ம் " மற்றும் "ங்" போன்ற எழுத்துகளை(பீஜங்கள்)  சேர்த்து கொண்டு உச்சரிக்கும்போது பலவித சித்திகளும் ,முக்தியும் கிடைக்கும் என பிருகு முனிவர் கூறுகிறார்.

முதலில் "அம்" என்று செபம் செய்து ,பிறகு "ஆம்" என்றும் ,"இம்", "ஈம்" ,"உம்", "ஊம்","எம்",
"ஏம்","ஐம்", "ஓம்", "ஔம்" என்றும் பதினோரு வகையான உயிர் பீசங்களை தனித் தனியாக
செபம் செய்யவேண்டும் . மனதிற்குள் செபித்தால் தான் மந்திரத்திருக்கு பலன் அதிகம் .
இவ்வாறு ஒவ்வொரு மந்திரத்தையும் மனதிற்குள் ஒரு லட்சம் முறை கூறவேண்டும் என கூறுகிறார். 

பிறகு மெய் எழுத்துகளுடன் "ங்" பீஜத்தை சேர்த்து கொண்டு செபிக்கவேண்டும் எனவும் கூறுகிறார்.  முதலில் "கங்" என்றும், பிறகு தொடர்ச்சியாக எல்லா மெய் எழுத்துகளுடன் இந்த பீஜத்தை சேர்த்து லட்சம் முறை செபிக்க வேண்டும் என கூறுகிறார்.


உதாரணமாக :
முதலில் "ஓம்"  பிறகு "அம்" இறுதியில் "நம:" என்று உச்சரிக்கலாம் .
"ம்" பீஜத்தை சேர்த்து மந்திரம் கூறும் முறை ..
"ஓம் அம் நம: "-என்று உச்சரித்தால் சித்தி கிடைக்கும்.
"ங்" பீஜத்தை சேர்த்து  மந்திரம் கூறும் முறை ..
 "ஓம் அங் நம: " என்று உச்சரித்தால் முக்தி கிடைக்கும்.

நமக்கு சித்திகள் வேண்டும் என்றால் "ம்" பீஜத்தையும் முக்தி வேண்டுமென்றால் "ங்" பீஜத்தையும் சேர்த்து உச்சரித்து பலன்களை பெறலாம் என்று கூறுகிறார்.

இவ்வாறு பீசங்களை செபிக்கும்போது மைவிழியாள் போகத்தை நிறுத்த வேண்டும் என கூறுகிறார் இவ்வாறு செய்தால் அறுபத்து நான்கு வகையான சித்திகளும் நிச்சயம் கிடைக்கும் என கூறுகிறார்.

சில முக்கிய தமிழ் மந்திரங்கள் உங்களுக்காக....
ஓம் அம் நம: -சித்து விளையாடும் தன்மை கிடைக்கும்,மரணத்தை வெல்லலாம் . 
ஓம் அங் நம: -முக்தி வழியான ஞானம் கிடைக்கும்

ஓம் ஆம் நம:- நினைத்தை வரவழைக்கும் ஆகர்ஷண தொழில் சித்தியாகும்.
ஓம் இம் நம: -உடல் புஷ்டி ஆகும்.
ஓம் ஈம் நம: -சரஸ்வதியின் கடாட்சம் கிடைக்கும் .
ஓம் உம் நம: -சகல தொழிலுக்கும் பலமுண்டாகும்.
ஓம் ஊம் நம:-உச்சாடன தொழில் சித்தியாகும்.
ஓம் எம் நம: சத்வ குணம் உண்டாகும்.
ஓம் ஏம் நம:-சர்வமும் வசியமாகும்.
ஓம் ஐம் நம:- ஆண்களை வசியபடுத்தும்.
ஓம் ஓம் நம: வாக்கு பலித சித்தி உண்டாகும்.
ஓம் ஔம் நம: - வாக்கில் ஒளி உண்டாகும்

யந்திரங்கள்

வரம் தரும் அதி சூட்சும சண்முக மந்திரம்
வரம் தரும் அதி சூட்சும சண்முக மந்திரம்

ஓம் நமோ பகவதே
சுப்ரமணியாய ஷண்முகாய மகாத்மனே
ஸ்ர்வ சத்ரு ஸ்ம்ஹார
காரணாய குஹாய மஹா பல பராக்ரமாய
வீராய சூராய மக்தாய மஹா பலாய
பக்தாய  பக்த பரிபாலனாயா
தனாய தனேஸ்வராய
மம ஸர்வா பீஷ்டம்
ப்ரயச்ச ஸ்வாஹா!
ஓம் சுப்ரமண்ய தேவதாய நமஹ! 


இதை அனுதினமும் முருகன் திருவுருமுன் 11 முறை சொல்லி வர நற்பலன் உண்டாகும். இது வழி வழியாக குரு உபதேசம் மூலம் அனுகிரகிக்கப்படும் மந்திரமாகும். இதை யந்திரத்தில் ஸ்தாபனம் செய்து 48 நாட்கள் பூஜித்தால் முருகன் காட்சி கிட்டும் என `மாலா மந்திரம்' என்னும் பழங்காலத்து நூல் தெரிவிக்கிறது.

மந்திரம் என்பதற்கு மன்னும் திறம்- நிலை பெற்றிருக்கும் திறன் என்று பொருள் கொள்ளலாம். யந்திரம் என்பது மந்திர சக்தி நிலைத்திருந்து இயங்கச் செய்யும் கருவி. புலனடக்கத்தோடு இறைவனை மனதில் இருத்தி உள்ளும் புறமும் நிலை நிறுத்திப் பூஜிப்பது யந்திரமுறை. யந்திரங்கள் இறைவனின் மறுவடிவாகவே போற்றப்படுகின்றன.

யந்திரங்கள் எனப்படும் சக்கரங்கள் காகிதத்தில்  வரையப்பட்டு கண்ணாடிச் சட்டத்திற்குள் வைக்கப்பட்டோ, மரம் அல்லது உலோகத்தில் கீறல்களாகச் செதுக்கியோ பயன்படுத்தப்படுகிறது. இச்சக்கரங்கள் தியானத்தின்போது மனதை ஒரு நிலைப்படுத்தப் பயன்படுகிறது. முருக வழிபாட்டில் அறு கோணச்சக்கரம் பயன்படுத்தப்படுகிறது.

இச்சக்கரத்தில் சம அளவுள்ள இரண்டு சம பக்க முக்கோணங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக நேர் எதிர் திசையில் படியுமாறு அமைக்கப்பட்டிருக்கும். இரண்டு முக்கோணங்களுக்கு நடுவில் அமைந்துள்ள புள்ளி உயிர்சக்தியாக- கந்தன் எனக்கொள்ளப்படுகிறது. இதைத் சுற்றியுள்ள தனிவட்ட வளையங்களில்- உள்வட்டத்தில் ஆறு தாமரை இதழ்களும், வெளி வட்டத்தில் பன்னிரண்டு தாமரை இதழ்களும் வரையப்பட்டிருக்கும்.

அவற்றை சுற்றி பூபுரம் எனப்படும் மூன்று சம இடைவெளியுடன் நான்கு பக்கங்களிலும் மூன்று சதுரங்கள் வரையப்பட்டிருக்கும். பூபுரம் என்ற வெளிச்சுற்று சதுரச் சுவர்களிலிருந்து தொடங்கி, படிப்படியாக உள்ளடங்கி மனதை கட்டுப்படுத்தி, மைய ஈர்ப்பு புள்ளியுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளும் மனப்பக்குவம் ஏற்பட்டுவிட்டால், தாம் விரும்புவது எளிதில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

முருகனுக்கு `சரவணபவ' என்ற ஷடாட்சர மந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இது வசியம், ஆகர்ஷணம், மோகனம், தம்பனம், உச்சாடனம், மாரணம் என்னும் ஆறு வகையான பணிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. வழிபாட்டு மந்திரத்தின் எழுத்துகளை முறை மாற்றி உச்சரிப்பதன் மூலம் விளைவுகள் வேறுபட்டதாயிருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஷடாட்சர மந்திரத்திற்கான யந்திரத்தை அமைக்க குறுக்கும் நெடுக்குமாக ஏழுகோடுகள் வரைந்தால் 36 சிறு கட்டங்கள் கிடைக்கும். அந்தந்த காரியங்களுக்கான வகையில் அந்த கட்டங்களில் எழுத்துகளை எழுதி, அவற்றிற்குரிய கோச மந்திரங்களும் குறிக்கப்படும். (அட்டவணை காண்க). இவைவெவ்வேறு முறைகளிலும் எழுதப்படும்.

இந்த மந்திரங்களை ஆறு வகையான பணிகளுக்கான மரப்பலகைகளில் எழுதி வைத்து, 1008 முறை உச்சரிப்பதன் மூலம் விரும்பிய பலனைப்பெறலாம். வசியத்திற்கு வில்வ மரத்திலும், ஆகர்ஷணத்திற்கு வெண் நாவல் மரத்திலும், மோகனத்திற்கு அலரி மரத்திலும், தம்பனத்திற்கு ஆல மரத்திலும், உச்சாடனத்திற்கு பலா மரத்திலும், மாரணத்திற்கு வில்வ மரத்திலும் எழுதுவதே பலனளிக்கக் கூடியதாம்.

சில மந்திரங்களை பீஜத்தோடும் சிலவற்றை கோசத்தோடும் உச்சரிக்க வேண்டும். தேவையான பீஜ.கோசங்களை சேர்த்து மந்திரங்களை உச்சரிப்பதே பலன் தரும். மனனம் செய்பவனை ரட்சிப்பது மந்திரமாகும். மெய்ஞ்ஞானிகள் மந்திர ஜபத்தால் செயற்கரிய செயல்கள் பலவற்றைச் செய்திருக்கிறார்கள்.

மந்திரங்களை முறையாக உச்சரிப்பதால் அதற்குரிய தேவதையின் திருவுருவம் சூட்சும வடிவில் உபாசகனின் முன் தோன்றுகிறது. மந்திர உச்சாடனம் செய்வதன் மூலம் சூட்சும சலனங்கள் ஏற்படுத்தி விரும்பிவற்றை அடைவதோடு இறைவன் திருவுருளையும் பெற முடியும்.

எலுமிச்சம்பழம்

உலகில் தோன்றிய புல் பூண்டுக்குக் கூட உயிர் உண்டு. அதனால் அதற்குத் தீங்கு செய்யக் கூடாது. துறவிகள் அதை மிதித்து நடக்கக் கூடாது என்று சமண மதம் போதிக்கிறது.
ஒவ்வொரு தாவரத்திற்கும் மின் சக்தியும், காந்த சக்தியும் உண்டு. அவை தாவரத்திற்குத் தாவரம் வித்தியாசப்படும்.
எலக்ட்ரோ மீட்டா் வைத்து அதன் மின் சக்தியை அளக்கலாம். அந்த மின்சக்திக்கு பயோ எலக்ட்ரிசிட்டி எனப் பெயா். இதே மாதிரி அனேக ஜீவராசிகளிலும் மின் சக்தி உண்டு.
ஜீவனுள்ள கனி என்பது எலுமிச்சம் பழம்! எலுமிச்சம் பழத் தோப்புக்குள் ஆசாரமில்லாதவா்கள் போனால் அவை வாடி விடும்.
எலுமிச்சம்பழத் தோட்டத்தில் சாம்பிராணி புகை போட்டுத் தீய சக்தியை விரட்டுவார்கள்.
“பதார்த்தகுண சிந்தாமணி” என்னும் நூலில் எலுமிச்சம் பழ மருத்துவம் கூறப்பட்டுள்ளது.
முன்பு வாழ்ந்த இந்துத் துறவிகள் தங்களுக்கு மாயையினால் தூண்டப்படும் காம சக்தியை அடக்க எலுமிச்சம் பழத்தைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.
அக்கினி தத்துவமுள்ள ஆண் தெய்வங்களுக்கும், பெண் தெய்வங்களுக்கும் எலுமிச்சம் மாலை போட்டுக் குளிர்விக்கின்றனா்.
மாரியம்மன் கோயில், காளி அம்மன் கோயில் ஆகியவற்றில் பக்தா்கள் மஞ்சள் பொடி, நல்லெண்ணெய் சோ்த்து எலுமிச்சம் சாதம் நைவேத்தியம் செய்து பின் சாப்பிட்டால் தீராத நோய்கள் விலகும்.
செவ்வாய் மாலை எலுமிச்சம் சாதம் சூடாக நைவேத்தியம் செய்யலாம். முடிந்தால் எலுமிச்சம் சாதம் அன்னதானமும் செய்யலாம்.
எலுமிச்சை அதீத சக்தியைப் பற்றிய நூல் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
அஷ்ட கா்மம் என்பது எண்வகைத் தொழில்கள். மோகனம், வசியம், ஆகா்ஷணம், ஸ்தம்பலம், உச்சாடனம், பேதனம், வித்வேடணம், மாரணம் ஆகியவை.
மேற்படி எட்டுத் தொழிலுக்கும் சித்தா்கள் எலுமிச்சம் பழத்தை உபயோகித்ததாகத் தெரிகிறது. மாந்திரீகா்கட்கு முக்கியமான பொருள் எலுமிச்சம்பழம். அது இல்லாவிட்டால் மாந்திரீகம் கிடையாது.
நம் வலது கையில் ஒரு எலுமிச்சம்பழம் வைத்து நாம் ஒருவரை எண்ணினால் நம் எண்ணம் நாம் எண்ணியவரிடம் போய் அலைஅலையாய்த் தாக்கும். அக்காலத் ரெலிப்பதி முறை இதுதான்.
ஒரு பழத்தைக் கையில் வைத்துக்கொண்டு சூரியக் கலையில் சுவாசம் செய்து கொண்டு பல கிரகங்களுடன் தொடா்பு கொள்ளலாம்.
கொடி எலுமிச்சை என்பது ஒரு வகை. அது பெரிதாக முட்டை அளவிருக்கும். அதைக் கையில் வைத்து எந்த மத தேவதைகளையும் மந்திரம் சொல்லி அழைக்கலாம். கொடி எலுமிச்சையை சாதாரண எலுமிச்சையுடன் கலந்து விற்பார்கள். ஒரு எலுமிச்சம் பழத்தை விலை பேசாமல் வாங்கி தெய்வ ஆகா்ஷண மந்திரத்தையும், பிதுா் ஆகா்ஷண மந்திரத்தையோ அதில் தினம் உரு ஏற்ற வேண்டும். அதைப் பூஜை அறையில் வைத்து வர வேண்டும்.
40 நாளில் அந்தப் பழம் நாம் வேண்டிய தெய்வத்தை அல்லது ஆவியை ஈா்த்துக் கொண்டு வரும். நாம் மனதில் எண்ணுவது அதற்குத் தெரியும். வீட்டில் அனைவரும் பேசும் பேச்சுக்களைப் பதிவு செய்யும்.
அதனால் வீட்டின் முகப்பில் எலுமிச்சம் பழம் கட்ட வேண்டும். வீட்டுக்குள் நுழைபவா்களின் எண்ணம் நம்மைத் தாக்குவதில்லை. மேற்படி பழ வலிமையால் அவா்கள் எண்ணம் அங்கேயே தடுக்கப்படுகின்றது.
எலுமிச்சைச் சாறு, மஞ்சள் பொடி, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் கொண்டு தயாரிக்கப்பட்ட குங்குமத்தை புருவ மத்தியில் இட்டுக் கொண்டு வந்தால் நெற்றிக் கண் திறக்கும்.
அமாவாசையில் சுடுகாட்டுக்குப் போய் தனக்கு அடிமையாக இருக்க விரும்பும் ஆவியை வா என எண்ணி எலுமிச்சம் பழத்தை எறிந்து விட்டு வந்து விடுவார்களாம். பெளா்ணமிக்கு மேற்படி பழம் ஒருநாள் இரவு அவா்கள் கால் மாட்டில் கிடக்குமாம். அதை எடுத்துத் துண்டு துண்டாக்கிச் சாப்பிடுவார்களாம். அந்த ஆவி சாப்பிட்டவா்கள் உடலுக்குள் போய்விடுமாம். அதனை ஏவி மாந்திரீகா் தொழில் பார்ப்பார்களாம். இள வயதில் மாந்திரீக நண்பா் சொல்லக் கேட்டது இது.
கேரளாவில் ஆவி பிடித்தவனை உட்கார வைத்து ஒரு பெரிய எலுமிச்சம் பழத்தை எடுத்து, அவன் தலையைச் சுற்றி வலது புறமாக ஒரு சுற்று சுற்றுகிறார்கள். பின் ஒரு குண்டூசி எழுத்துப் பழத்தின் தலைப்பக்கம் கத்தி அமுக்கி விடுகின்றனா். பின்னா் ஒரு சுற்று அதே தலைப்பக்கம் குத்தி அமுக்கி விடுகின்றனா். பின்னா் ஒரு சுற்று அதே பழத்தை இடது பக்கமாக அவன் தலையைச் சுற்றி எடுத்துப் பழத்தின் கீழ்ப்பக்கம் குத்துகின்றனா்.
பின்னா் வலது பக்கம், இடது பக்கம் மாறி மாறி சுற்றி ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு குண்டூசியாகப் பழத்தில் குத்துகின்றனா். பழத்தின் மேல் பக்கம் ஒரு குண்டூசி சுற்றிவர 25 குண்டூசிகள் ஆக மொத்தம் 27 சிறு குண்டூசிகள்! அவனைப் பிடித்த பீடை விட்டு விடுகின்றது.
பிறகு உடனே அதை ஓடும் தண்ணீரில் போட்டு விடுகின்றனா். இதை நேரில் கண்டேன்.
தன் குல தெய்வம் எது என்று தெரியாதவா்கள் ஒரு எலுமிச்சம் பழத்தை வாங்கி, என் குல தெய்வமே! நீ எங்கிருக்கிறாய்? என மனமுருகி வேண்டி வீட்டில் வைத்துவிட வேண்டும். தினமும் வேண்டிக் கொள்ள வேண்டும். 9 நாள் கழித்து, அதை அருள்வாக்கு சொல்பவரிடம் கொடுத்தால் உங்கள் குல தெய்வம் எங்குள்ளது என எளிதாகச் சொல்லி விடுவார்கள்.
தெய்வங்களை உபாசனை செய்பவா்கள் பழத்தில் தெய்வ மந்திரத்தை மூன்று தினங்கள் உரு ஏற்றி, பின் அதன் சாற்றில் தண்ணீா் பிட்டு, வெல்லம், ஏலக்காய் கலந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் சித்தி கிடைக்கும்.
சில சாதுக்கள் உரு ஏற்றிக் கொடுக்கும் பழம் வெகுநாள் வரை கெடாது. சில போ் உரு எற்றிக் கொடுக்கும் பழம் சில தினங்களில் அழுகி விடும்.
மந்திரவாதிகள் கொடுக்கும் பழம், நம் குடும்ப நிகழ்ச்சிகளை அவருக்கு அறிவித்துக் கொண்டே (Transmit)    இருக்கும். அதன் மூலம் அவா் உங்களை ஆட்டுவிப்பார்.
தைமாதப் பிறப்பன்று அல்லது புதுவருடம் பிறப்பன்று. அருளாளா்களையோ, எஜமானா்களையோ பார்க்கப் போகும்போது, அவசியம் எலுமிச்சம்பழம் கொண்டு செல்ல வேண்டும் நம் நல்ல எண்ணத்தை அதன் மூலம் அவா்களுக்குச் சமா்ப்பிக்க வேண்டும்.
எலுமிச்சையை வைத்து அனேகா் அபிசாரப் பிரயோகம் செய்கின்றனா். அதை நான் எழுத விரும்பவில்லை.
ஆந்திர மந்திரவாதிகள் எலுமிச்சம் பழத்தில 40 நாள் வசிய மந்திரம் உரு ஏற்றுகின்றனா். பின் அதைக் கருக்கிக் கஸ்தூரி, கோரோசனை, ஜவ்வாது, அரகஜா, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், புனுகு சோ்த்து, காராம்பசு நெய்விட்டு அரைக்கின்றனா் பின் மீண்டும் அதற்கு வசிய மந்திரம் உருவேற்றி, வசியத் தொழில் செய்து பல லட்சம் சம்பாதிக்கின்றனா்.
பிரபல விஞ்ஞானி G.D  நாயுடு எலுமிச்சை விதைகளைக் கொண்டு குடும்பக் கட்டுப்பாடு மருந்து கண்டுபிடித்தார்.
எலுமிச்சைச் சாற்றுக்குப் பயங்கர சக்தி உள்ளது. அனேக சித்த ஆயுா்வேத மருந்துகளை எலுமிச்சைச் சாற்றில் சுத்தி செய்கின்றனா்.
ஐம்பது மில்லி சாற்றில் ஒரு பவளத்தை அல்லது கடல் சோழியையோ தட்டிப் போட்டால் ஒரு மணி நேரத்தில், அவை கரைந்து போகும். இதற்கு பயோ கால்சியம் (Bio – Calcium) என்று பெயா்.
மருளாடிகளின் சாமி ஆட்டத்தைக் குறைக்க எலுமிச்சம் பழம், வெல்லம், ஏலக்காய் போட்ட பானத்தைக் கொடுப்பது அனைவரும் அறிந்ததே!
சில பள்ளிச் சிறுவா் – சிறுமிகள் பிடிவாத குணம் கொண்டவா்களாகவும், கண்ணில் கண்ட பொருள்களை எடுத்து உடைப்பவா்களாகவும் இருப்பார்கள். பிறவியிலேயே அவா்களுகட்குச் சில நரம்புகள் இறுகியிருக்கும். அதைத் தளர்த்தினால்தான் அவா்களின் கோபம் பிடிவாதம் மற்றும் ரென்ஷன் போகும்.
அவா்களுக்கு ஒரு டம்ளா் தண்ணீரில் அரை எலுமிச்சைச் சாறு பிழிந்து, சிறிது வெல்லம், ஒரு ஏலக்காய் தட்டிப் போட்டுக் குடிக்கக் கொடுக்க வேண்டும்.
அல்லது எலுமிச்சம்பழ சா்பத் குடிக்கக் கொடுக்கலாம். பகல் 12.00 மணிக்கு ஒரு நேரம் மட்டும் கொடுக்கவும். ஒன்பது நாள் மட்டும் இப்படிக் கொடுக்கவும். பின் கொடுக்க வேண்டாம். குணம் தெரியும்.
எலுமிச்சம் பழத்தில் ஏராளமான ரகசியங்கள் உள்ளன. இதை விஞ்ஞான பூா்வமாக ஆராய்வது நல்லது. ஆன்மிகத்திற்கு எலுமிச்சம்பழம் ஒரு சிறந்த துணை என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை

ஜின் வசியம்

ஜின் வசியம்

நண்பர்களே நான் ஜின் வசியம் எழுதுகின்றேன்

ஜின் என்பது இஸ்லாம் முறை ஆகும்.இந்த ஜின்தேவதை ஆண்,பெண் என இரண்டு வகை உண்டு.இந்த ஜின்தேவதை வைத்து தான் மசூதிகளில் பேய்,பிசாசு,அருள்வாகுக்,குழந்தை முகத்தில் தண்ணீர் தொழித்தல், செய்வினை,உண்டாகுதல்,அழித்தல்,ஆகியவை நடைபெருகின்றன.  இந்த தேவதை முக்காலம்தை நம்மிடத்தில் பேசும், நமக்கு பாதுகாப்பாகவிளங்கும். மறைமுகமாக  நமக்கு பல பொருள்கள் தரும்.இந்த தேவதை வைத்து சித்துவிளையாட்டு விளையாடலாம்.

மூலமந்திரம்

ஓம் நங் ரங் மங் ரங் யங்  குவிய குவிய  மகேந்திர ஜின் அகோர ஜின் யாருகும் அடங்காத ஜின் நன்லாட ஜின் பூதப் பிரேத சர்வ துஷ்ட பேய் பிசாசுகளையும்  சதா கோடிபட் அகோர நசி நவ்வும் சிவாய நம மசி மசி கண்டால் ரசி கட்டாயம் ரசி ரசி மசி ரசி  ரசி ஓம் கம் படு படு உனது கோபாக்கனி வேலை விடு விடு சுவாஹா

இந்தமந்திரத்தை லட்சம் உரு உபாசனை செய்ய சித்து ஆகும்.நாம் நினைத்த காரியம் நடத்தலாம்

சக்ரா தியானம்

சக்ரா தியானம்

சக்ரா தியானம் செய் முறை
(குறிப்பு: கூடுமான அளவு எளிமையாக இந்த தியான செய் முறை விளக்கப்பட்டு இருந்தாலும் தகுந்த பயிற்சியாளர்களிடம் இருந்து இந்த தியானத்தைக் கற்றுக் கொள்வது சிறந்தது)

சக்ராக்கள் அமைந்துள்ள இடங்கள், அவைகளுக்குத் தரப்பட்டிருந்த சின்னங்கள், மந்திர பீஜ ஒலிகள் ஆகியவற்றை நாம் முன்பு பார்த்தோம். இனி சக்ரா தியானம் செய்வது எப்படி என்று பார்ப்போம். ஆரம்பத்தில் இந்த தியானம் கஷ்டமாகத் தோன்றினாலும் செய்யச் செய்ய நாளடைவில் இது மிக சுலபமானதாக மாறி விடும். இதில் அந்தந்த சக்ராக்களின் பெயரைச் சொல்வதும், மந்திரங்களைச் சொல்வதும் சத்தமாகவோ, மனதினுள்ளோ உங்கள் வசதிப்படி சொல்லலாம். அந்தந்த சக்ராவின் சின்னங்களை உருவகப்படுத்திக் கொள்ள சிரமம் இருந்தால் அந்தந்த சக்ராவின் நிறமுள்ள சக்கரங்களாகவும் உருவகப்படுத்திக் கொள்ளலாம்.


1) மற்ற தியானங்களைப் போலவே அமைதியான ஓரிடத்தில் உங்களுக்கு வசதியானபடி சம்மணமிட்டோ, பத்மாசனத்திலோ, நாற்காலியிலோ நிமிர்ந்து நேராக அமருங்கள். உங்கள் உள்ளங்கை மேலே பார்த்த வண்ணம் திறந்திருக்கும் படி தொடைகளில் கைகளை வைத்துக் கொள்ளுங்கள். கைகளின் கட்டை விரலின் அடிப்பாக நுனியில் சுட்டு விரல் நுனியை வைத்து ஒரு முத்திரையை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் மூச்சு சீராகும் வரை மூச்சில் கவனம் வையுங்கள்.

2) உங்கள் மூலாதாரச் சக்ராவை மனதில் அந்தச் சின்னமாகவோ அல்லது சிவப்பு நிறச் சக்கரமாகவோ உருவகப்படுத்திக் கொள்ளுங்கள். அப்படி உருவகப்படுத்திக் கொள்ள ஆரம்பத்தில் சிறிது நேரம் தேவைப்படலாம். அவசரமில்லாமல் அமைதியாக உருவகப்படுத்திக் கொண்டு உங்கள் கவனத்தை அந்த சக்ராவிற்கு கொண்டு செல்லுங்கள். மனதில் இந்த சக்ரா சின்னமாகவோ, சிவப்பு நிற சக்கரமாகவோ பதிந்த பின்னர் “ஓம் மூலாதார” என்று சத்தமாகவோ, மனதிற்குள்ளோ சொல்லுங்கள். பின் மூச்சை உள்ளிழுக்கையில் இந்தச் சக்ரா நல்ல ஒளி பெறுவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். மூச்சை வெளி விடும் போது இந்த சக்ரா திறப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். மூச்சை வெளியே விடும் போது லா........ம்/ங் என்ற மந்திரத்தை சத்தமாகவோ, மனதிற்குள்ளோ நிதானமாக உச்சரித்த படியே வெளியே விடுங்கள். இந்த மந்திர ஒலியால் அந்த திறக்கப்படும் சக்ரா சக்தி பெறுவதாக உணருங்கள். இப்படி லா........ம்/ங் மந்திரத்தை ஒரு முறையிலிருந்து ஏழு முறை வரை வெளிமூச்சு விடும் போது உச்சரிக்கலாம். இதைச் செய்யும் போது உங்கள் முழுக்கவனமும் இந்த சக்ராவிலேயே இருக்கட்டும். (நீங்கள் இந்த மந்திரத்தை எத்தனை முறை இந்த சக்ராவிற்குச் சொல்கிறீர்கிறீர்களோ அத்தனையே முறை தான் மற்ற ஆறு சக்ராக்களுக்கும் உரிய மந்திரத்தை நீங்கள் சொல்ல வேண்டும்.) முடிக்கையில் அந்த சக்ரா குறைபாடுகள் ஏதாவது இருந்திருக்குமானால் நீங்கி வலிமையடைந்து ஜொலிப்பதாக உணருங்கள்

3) அடுத்ததாக உங்கள் கவனத்தை சுவாதிஷ்டானா சக்ரா அமைந்துள்ள இடத்திற்குக் கொண்டு செல்லுங்கள். அந்த சின்னமாகவோ, ஆரஞ்சு நிற சக்கரமாகவோ அந்த சக்ராவை அந்த இடத்தில் மனக்கண்ணில் காணுங்கள். உங்கள் உருவகம் தெளிவான பின் “ஓம் ஸ்வாதிஸ்தான” என்று சொல்லுங்கள். பின் மூச்சை உள்ளிழுக்கையில் இந்தச் சக்ரா நல்ல ஒளி பெறுவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். மூச்சை வெளி விடும் போது இந்த சக்ரா திறப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். மூச்சை வெளியே விடும் போது வா........ம்/ங் என்ற மந்திரத்தை நிதானமாக உச்சரித்த படியே வெளியே விடுங்கள். இந்த மந்திர ஒலியால் அந்த திறக்கப்படும் சக்ரா சக்தி பெறுவதாக உணருங்கள். இந்த மந்திரத்தையும் நீங்கள் மூலாதார மந்திரத்தை எத்தனை முறை சொன்னீர்களோ அத்தனை முறை சொல்ல வேண்டும். முடிக்கையில் அந்த சக்ரா குறைபாடுகள் ஏதாவது இருந்திருக்குமானால் நீங்கி வலிமையடைந்து ஜொலிப்பதாக உணருங்கள்.

4) இதே போல் மற்ற சக்ராக்களுக்கும் செய்தல் வேண்டும். மணிப்புரா சக்ராவுக்கு அந்த சின்னம் அல்லது மஞ்சள் நிற சக்கரம் நினைத்து “ஓம் ஸ்ரீ மணிபத்மே ஹம்” என்று சொல்லி ரா........ம்/ங் என்ற மந்திரத்தைச் சொல்ல வேண்டும். மற்ற சக்ராக்களுக்கு ஓம் அனாஹத, ஓம் விஷுத்தி, ஓம் ஆஜ்னேய, ஓம் சஹஸ்ரார என்று சொல்லி, அந்தந்த சின்னங்கள் அல்லது அந்தந்த நிறச் சக்கரங்களை எண்ணி, முறையே யா........ம்/ங், ஹா.......ம்/ங், ஓ.......ம் (a…u….m), ஓ...கூம்...சத்யம்....ஓ...ம்” என்ற மந்திரங்களைச் சொல்ல வேண்டும்.

5) சக்ராக்களின் பெயர்களைச் சொல்வதில் மணிபுரா சக்ராவிற்கு மட்டும் “ஓம் ஸ்ரீ மணிபத்மே ஹம்” என்று சொல்ல வேண்டும். மற்ற சக்ராக்களுக்கு ஓம் என்று சொல்லி அந்தந்த சக்ராவின் பெயரையே சொல்ல வேண்டும். அதே போல் மந்திர ஒலிகள் உச்சரிப்பதில் சஹஸ்ராரா சக்ராவுக்கு மட்டும் ’ஓகூம் சத்யம் ஓம்’ என்ற மந்திரத்தைச் சொல்ல் வேண்டும். மற்ற சக்ராக்களுக்கு முன்பு நாம் சொன்ன மந்திரங்கள் தான். இந்த இரு வித்தியாசங்களைத் தவிர எல்லா சக்ராக்களையும் எண்ணி சக்ரா தியானம் செய்வது ஒரே மாதிரி தான். இதை நினைவில் கொள்ளவும்.

இந்த சக்ரா தியானம் மிக சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதில் ஒவ்வொரு சக்ராவுக்கும் சமமான முக்கியத்துவத்தைத் தருவது முக்கியம். ஒரு சங்கிலியின் உண்மையான வலிமை அதன் மிக பலவீனமான பகுதியைப் பொறுத்தே இருக்கிறது என்று சொல்வார்கள். ஒரு பகுதி மிக வலிமையாக இருந்து இன்னொரு இணைப்பு மிக பலவீனமாக இருந்தால் அந்த இடத்தில் அது சுலபமாகத் துண்டிக்கப்படும் அல்லவா? அது போலத் தான் சக்ராக்களும். எல்லா சக்ராக்களையும் சமமாக பாவித்து ஒரே மாதிரியான முக்கியத்துவம் அளியுங்கள்.


(குண்டலினி சக்தியை மேலுக்குக் கொண்டு வருவதும் இந்த சக்ராக்கள் மூலமாகத் தான். மூலாதார சக்ராவில் உறங்கிக் கிடக்கும் குண்டலினியை சஹஸ்ரார சக்ராவிற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அதற்கு முறையான பயிற்சியும், கடுமையான கட்டுப்பாடும், தகுந்த சுத்தமான சூட்சுமமான மனநிலையும் இருப்பது மிக அவசியம். அதில் ஏதாவது சிறு குறைகள் ஏற்பட்டால் கூட பெரிய ஆபத்தை அவை ஏற்படுத்த வாய்ப்புண்டு. எனவே முறையாக சரியாக தயார்ப்படுத்திக் கொள்ளாமல், உண்மையான நிபுணரின் கண்காணிப்பில் அல்லாது முயற்சி செய்வதும் ஆபத்தே. குண்டலினியை நான் எழுப்பிக் காட்டுகிறேன் என்று பலரும் இணையத்திலும், பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்வதை உடனே நம்பி ஏமாந்து விடாமல் இருப்பது நல்லது. மிகச் சிலரே உண்மையில் அதில் தேர்ச்சி பெற முடியும் என்பதையும் அதிலும் வெகுசிலரே பொது வாழ்வில் காணக் கிடைப்பார்கள் என்பதையும், அவர்களும் கூட தகுதிகளை பரிசோதித்து தெளிவடையாமல் கற்றுக் கொடுக்க முனைய மாட்டார்கள் என்பதையும் நினைவில் வைக்கவும்.)

இந்த சக்ரா தியானம் உடலின் எல்லா சக்ராக்களையும் சூட்சுமமாகவும், வலிமையாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆரோக்கியம், வலிமை, அறிவு, ஞானம் ஆகிய அனைத்துமே சக்ரா தியானம் செய்யச் செய்ய மேம்படும் என்பது உறுதி.